Main Menu

தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்காவை முந்தியது இந்தியா!

தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா அமெரிக்காவை முந்தியுள்ளது.

கடந்த மாதம் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் வேகமெடுத்துள்ளன.

இந்தியாவில் இன்றைய (திங்கட்கிழமை) நிலைவரப்படி 32,36,63,297 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.  இது அமெரிக்காவை விட அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்காவில் இதுவரை 32,33,27,328 பேர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...