Main Menu

பேதங்களை மறந்து புதிய இலங்கையை கட்டியெழுப்புவது அவசியம்

பேதங்களை மறந்து புத்த பெருமானின் வழிகாட்டலுடன் சகல இனத்தவர்களும் சமத்துவமாக வாழக்கூடிய புதிய இலங்கையை கட்டியெழுப்புவது அவசியமாகும் என்று கொழும்பு மறைமாவட்ட ஆயர் கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

ஐ.எஸ் பயங்கரவாததத்தை தோற்கடிப்பதற்கான ஐம்பெரும் திட்டங்களை உள்ளடக்கிய செயற்றிட்டத்தை வெளியிட்டும் வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர் நாட்டின் கலாசாரத்தின் மீது பௌத்த சமயம் கூடுதல் தாக்கம் செலுத்தியிருக்கின்றமையினால் அதன் வழிகாட்டல்களுக்கு அமைய முஸ்லிம்களும் கத்தோலிக்கர்களும் செயற்படுவதன் மூலம் சக வாழ்வை கட்டியெழுப்ப முடியும் என்று கூறினார். 

இலங்கை தேசிய மகா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு கொழம்பு மன்றக்கல்லரேியில் நேற்று நடைபெற்றது. 

பயங்கரவாதத்தை சர்வதேச மட்டத்தில் உருவாக்கி ஆயுதங்களை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் தற்சமயம் அமுலாவதாகவும் அவர் மேலும் கூறினார். 

பகிரவும்...