Main Menu

பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல்!

ஜேர்மனியில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உருகுவேயிலிருந்து ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்தே நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொள்கலனை சோதனைக்கு உட்படுத்திய போதே அதிலிருந்து 4.5 டன் கொக்கைய்ன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ள கொக்கைய்ன் போதைப்பொருள் 1 பில்லியன் யூரோக்கள் பெறுமதியானது என ஜேர்மனிய சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜேர்மனிய சுங்கத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...