Main Menu

ஏமனில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 19 இராணுவத்தினர் உயிரிழப்பு!

ஏமனில் அல்-கொய்தா பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 19 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஏமன் அரசாங்கத்திற்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் மீது உள்நாட்டுப் படைகளும் அண்டை நாடான சவுதி அரேபியா தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக நேசநாட்டுப் படைகளும் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அத்துடன், அண்மைக்காலமாக அங்கு மீண்டும் தலையெடுத்து வரும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் அரசப்படையினர் மீது அவ்வப்போது திடீரென அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையிலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலில் 19 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளனர்.

பகிரவும்...