Main Menu

பென்சில் வேனியாவில் ஜோ பைடன் வெற்றி : ட்ரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

பென்சில்வேனியாவில் ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தரப்பு தாக்கல் செய்த மனுவை அம்மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில், பென்சில்வேனியா மாகாணத்தில் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி டொனால்ட் ட்ரம்ப் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கான போதிய ஆதாரங்களை டொனால்ட் ட்ரம்ப் தரப்பு சமர்ப்பிக்க தவறியதால் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதனால், தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தரப்பினருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பகிரவும்...