Main Menu

பெங்களூரு சிறையில் இன்று சசிகலாவை தினகரன் சந்தித்தார்

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் இன்று சந்தித்து பேசினார்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை 15 நாட்களுக்கு ஒருமுறை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் சந்தித்து பேசுவது வழக்கம்.

கடந்த 13-ந் தேதி அவர் சசிகலாவை சந்தித்து பேசினார். அதன்பிறகு இன்று பகல் 12.30 மணிக்கு அவர் சசிகலாவை சந்தித்து பேசினார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வருகிறார். அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து சசிகலாவுடன் தினகரன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

பகிரவும்...