Main Menu

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் விஜயகாந்தின் தே.மு.தி.க. தனித்துப் போட்டி!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியுள்ள நிலையில், இவ்வாறு தனித்துப் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வி.பி.பி.வேலு இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.

இதேவேளை, புதுச்சேரியில் முதற்கட்டமாக ஐந்து தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பாகூரில் தான் போட்டியிடவுள்ளதாக வி.பி.பி.வேலு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உப்பளம் தொகுதியில் சசிகுமாரும், காலாபேட் தொகுதியில் ஹரிஹரன் என்ற ரமேஷ், நெடுங்காடு தொகுதியில் ராம்டீம் ஞானசேகர், திருநள்ளாறு தொகுதியில் ஜிந்தா என்ற குரு ஆகியோரும் போட்டியிடவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும். இன்னும் ஓரிரு நாட்களில் மீதமுள்ள 25 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனவும் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் பாலு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேர்தல் பிரசாரத்துக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் புதுச்சேரிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...