Main Menu

‘பிரெக்ஸிட்’ காலக்கெடு நீட்டிப்பு – ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு

பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை பிரெக்ஸிட் என அழைக்கப்படுகிறது.

ஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு இன்று (வெள்ளிக்கிழமை) முடிய இருந்த நிலையில், அதனை தவிர்க்கும் வகையில் இங்கிலாந்து எம்.பி.க்கள் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும் மசோதா ஒன்றை நிறைவேற்றி அதற்கு ராணி எலிசபெத்தின் ஒப்புதலையும் பெற்றனர்.

இதனால் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும்படி ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களிடம் தெரசா மே கோரிக்கை வைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.

சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது. இறுதியில், பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.  

பகிரவும்...