பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 56ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 56ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 56ஆயிரத்து 553பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 15இலட்சத்து 57ஆயிரத்து 007பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 18ஆயிரத்து 213பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 696பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 489பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.