Main Menu

பிரித்தானியச் சிறுவன் கடிதம் – தனது ருவிற்றர் பக்கத்தில் மஹிந்த கருத்து

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கைச் சிறுவன், தனக்கு எழுதிய கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிற்றர் பக்கத்தில் பகிர்ந்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அச்சிறுவன் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள பிரதமர், நான் லண்டனில் வசிக்கும் ஆறு வயதுச் சிறுவன் அப்துல்லா, பிரிட்டிஷ் – இலங்கையராக இருப்பதால் அற்புதமான இலங்கைக்காக என் இதயம் 100% அன்புடன் நிறைந்துள்ளது.

உங்கள் வெற்றியை நான் வாழ்த்த விரும்புகிறேன். என் அம்மா அதைப் பற்றி என்னிடம் கூறினார். நான் உங்களுடன் மிக முக்கியமான ஒன்றை விவாதிக்க விரும்புகிறேன்.

தயவுசெய்து சுற்றுச்சூழலை உங்கள் மிகப்பெரிய முன்னுரிமை வழங்க முடியுமா? எங்கள் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. இலங்கையின் அற்புதமான கடற்கரைகள் மற்றும் கடல்களைப் பாதுகாக்க அமைப்புகளை உருவாக்க முடியுமா?

அதன் மூலம் ஆமைகள் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக் கடற்கரைகளைப் பார்வையிடும் என்னுடைய வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்.  அதிக அன்புடன் அப்துல்லா அபுபத்” என எழுதியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், “இன்று காலை எனக்குக் கிடைத்த கடிதத்திற்கு 6 வயது அப்துல்லா அபுபத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது என்னை உற்சாகப்படுத்தியுள்ளது.

பழைய தலைமுறையினராகிய நாங்கள் எங்கள் இளைஞர்களிடம் வைத்திருக்கும் பொறுப்பை நினைவூட்டியது. நிச்சயமாக ஒருநாள் உங்களை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன். அத்தோடு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

பகிரவும்...