Main Menu

பிரான்ஸில் மூன்று வாரங்களுக்கு பிறகு நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு குறைந்தது!

பிரான்ஸில் மூன்று வாரங்களுக்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு குறைந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரான்ஸில் நான்காயிரத்து 70பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 81பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 7ஆம் திகதிக்கு பிறகு (4,203பேர்) தற்போது நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு குறைந்துள்ளது.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில், ஐந்து இலட்சத்து 42ஆயிரத்து 639பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31ஆயிரத்து 808பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை, நான்கு இலட்சத்து 15ஆயிரத்து 405பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 118பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன், இதுவரை 95ஆயிரத்து 426பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...