Main Menu

பிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் பிரான்ஸில், பத்தாயிரத்து 593பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்பட்டுள்ளனர். 50பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை நான்கு இலட்சத்து 15ஆயிரத்து 481பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31ஆயிரத்து 095பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை பிரான்ஸில் இரண்டு இலட்சத்து 93ஆயிரத்து 546பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 800பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை 90ஆயிரத்து 840பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...