Main Menu

பிரான்ஸின் பழமையான நோர்து-டேம் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இரத்து!

பிரான்ஸில் ஒவ்வொரு தேவாலயத்திலும் கிறிஸ்மஸ் பண்டிகைகளுக்கான கொண்டாட்டங்கள் தயார்நிலையில் உள்ள நிலையில், அங்குள்ள மிகவும் பழமையான நோர்து-டேம் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

நோர்து-டேம் தேவாலயத்தின் திருத்தப்பணிகள் நிறைவுப் பெறாத நிலையில், இந்த தீர்மானத்தை தேவாலய நிர்வாகம் எடுத்துள்ளது.

இதன்மூலம், 1803 ஆம் ஆண்டில் பின்னர், சுமார் 216 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக இவ்வருடம் இந்த கொண்டாட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

கடந்த நூற்றாண்டுகளில் ஒவ்வொரு வரலாற்றுச் சம்பவங்கள் இடம்பெற்ற போதும் தடையின்றி கிறிஸ்மஸ் வழிபாடு இடம்பெற்ற நோர்து-டேம் தேவாலயத்தில், தேவாலயத்தின் திருத்தப்பணிகள் ஐந்தாண்டு கால திட்டம் என்பதால் வரும் வருடங்களில் கிறிஸ்மஸ் வழிபாடுகள் இடம்பெறுமா என்பது சந்தேகமே.

நோர்து-டேம் தேவாலயம் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி தீப்பிடித்து எரிந்திருந்தது. இதில் தேவாலயத்தின் கூரை முற்றாக எரிந்து சாம்பலாகியிருந்தது. 850 ஆண்டுகள் பழையான இந்த தேவாலயம் தீ விபத்தில் சிக்கியிருந்தது உலகம் முழுவதும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, நோர்து-டேம் தேவாலய திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீ விபத்தின் பின்னர், அளவுக்கு அதிமான தூசுகள் காற்றில் கலப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து கடந்த ஜூலை 25ஆம் திகதி தேவாலய திருத்தப்பணிகள் இடை நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், தேவாலயத்தில் இருந்து வரும் தூசு கலந்த காற்றினை சுவாசித்ததாக தெரிவிக்கப்பட்டு, 100 மாணவர்களுக்கு இரத்தப்பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னர் தேவாலய திருத்தப்பணிகள் மீண்டும் ஓகஸ்ட் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

பகிரவும்...