Main Menu

பிரான்சில் முதன் முறையாக.. – பரிசில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பேரணி!

பரிசில் ஓரினச்சேர்க்கையாளர்கள் (lesbiennes) இணைந்து மிகப்பெரிய பேரணி ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்.  வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 25 ஆம் திகதி இந்த பேரணி பரிசில் இடம்பெற உள்ளது. பகல் 2 மணி அளவில் Place du Châtelet இல் ஆரம்பிக்கும் இந்த பேரணி மாலை 5 மணிக்கு Place de la République இல் வந்து நிறைவடைகின்றது.  பல்வேறு ஓரினச்சேர்க்கையாளர்கள் அமைப்பு இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன. ஓரினச்சேர்க்கையாளர்களின் குரலை மிக அழுத்தமாக பதிவு செய்ய இந்த பேரணி அவசியமாகிறது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.  பேரணியில் கலந்துகொள்பவர்கள் கண்டிப்பாக PCR பரிசோதனை அறிக்கையை கைகளில் வைத்திருக்கவேண்டும் எனவும், முகக்கவசம் அணிவதோடு, சனிடைசர் போத்தல்களும் கைகளில் வைத்திருக்க வேண்டும் என அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.  இந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் இணைந்து மேற்கொள்ளும் பேரணி பிரான்சில் இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும். 

பகிரவும்...