Main Menu

பிரமாண்ட தயாரிப்பில் ‘தர்பார்’ படத்தின் முதல் பாடல் வெளியாகிறது

லைக்காவின் பிரமாண்ட தயாரிப்பில் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (புதன்கிழமை) வெளியாகிறது

படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்ற நிலையில், டிசம்பர் 7 ஆம் திகதி இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

இப்படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் இசையும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிற நிலையில், இன்று மாலை 5 மணிக்கு ‘சும்மா கிழி’ என்ற முதல் பாடல் வெளியாகவுள்ளது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘சந்திரமுகி’ திரைப்படத்திற்கு பின் மீண்டும் நயன்தாரா, ரஜினிகாந்த் ஜோடியாக தர்பார் திரைப்படத்தில் இணைந்துள்ளார். அந்தவகையில் நயன்தாரா, ரஜினியுடன் இணையும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும். ஏற்கனவே, ‘குசேலன்’, ‘சிவாஜி’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

‘பேட்ட’ திரைப்படத்திற்கு பின் மீண்டும் அனிருத் ‘தர்பார்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். அதேபோல் தளபதி திரைப்படத்திற்கு பின் மீண்டும் சந்தோஷ் சிவன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளாராகியுள்ளார்.

ரஜினியின் 167ஆவது இத்திரைப்படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைந்துள்ள இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பகிரவும்...