Main Menu

பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி விசேட சந்திப்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அமைச்சர் உதயநிதி டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிக்கான நிறைவு விழா நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவே உதயநிதி டெல்லி செல்லவுள்ளானர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், வருகிற 19ஆம் திகதி  முதல் 31 ஆம் திகதி வரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெறவுள்ளன.

இவ்விளையாட்டுப் போட்டிகளில்  36 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 5,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் 1,600 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...