Main Menu

சிறுவர்களைக் கயிற்றில் கட்டி கொடூரமாகத் தாக்கிய நபர்: பீகாரில் பயங்கரம்

பீகாரில் நபரொருவர் ஊர் மக்கள் முன்னிலையில் 5 சிறுவர்களைக் கயிற்றினால் கட்டி, அவர்களைக்  கொடூரமாகத் தாக்கும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சிறுவர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்கள்  வலியால் கதறும் போது பொதுமக்கள் யாரும் உதவ முன்வரவில்லை எனவும் கூறப்படுகின்றது.

எனினும் இத்தாக்குதல் சம்பவம் எப்போது? எதற்காக இடம்பெற்றது? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகள்  மேற்கொள்ளப்படவேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பகிரவும்...