பிரதமர் நரேந்திரமோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை
நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு, நிறைவடையும் சூழலில், பிரதமர் நரேந்திரமோடி நாளை காலை 10 மணிக்கு, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இதனை, பிரதமர் அலுவலகம் டுவிட்டர் பதிவு மூலம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நீடித்து வருவதால், ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென பல்வேறு மாநில அரசுகளும் ஏற்கனவே பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத் துள்ளன. தமிழகம், ஒடிசா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்கள், ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித் துள்ளன. இந்த சூழலில், நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பை பிர தமர் நரேந்திர மோடி நாளை, வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prime Minister @narendramodi will address the nation at 10 AM on 14th April 2020.153K10:49 AM – Apr 13, 2020Twitter Ads info and privacy49.7K people are talking about this