Main Menu

‘பா.ஜ.க.வை இல்லாமல் செய்வோம்’ – நாவாப் மலீக்

நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வை இல்லாமல் செய்து விடுவோம் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மலிக் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ‘மகாராஷ்டிர விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. எனினும், இந்த கூட்டணியில் பிளவு ஏற்படும் என முன்னாள் முதலமைச்சர் பட்னாவிஸ் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பு நிர்வாகி மற்றும் மராட்டிய சிறுபான்மையோருக்கான மந்திரி நவாப் மலிக் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், ‘எங்களுடைய கட்சியில் இணைவதற்கு சில பா.ஜ.க. தலைவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். அதற்கான டிரெய்லர் வருகிற நாளில் வெளியிடப்படும். மகாராஷ்டிர விகாஸ் அகாடி கூட்டணியின் ஆட்சி முழு காலஅளவை நிறைவு செய்யும். நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வை இல்லாமல் செய்து விடுவோம். ஆனால் நாங்கள் அப்படி செய்ய விரும்பவில்லை’ என கூறினார்.

பகிரவும்...