Main Menu

பா.ஜ.க.வின் மற்றுமொரு கையென்றால் அது அ.தி.மு.க.தான்: கனிமொழி

பா.ஜ.க.வின் மற்றொரு கையாகவே அ.தி.மு.க தொடர்ந்து செயற்பட்டு வருகின்றதென தி.மு.க உறுப்பினர் கனிமொழி குற்றம் சுமத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்திந்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கனிமொழி மேலும் கூறியுள்ளதாவது, “நீலகிரியிலுள்ள மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆனால் தமிழக அரசு எந்தவித உதவிகளையும் அவர்களுக்கு சரியாகச் செய்யவில்லை. ஆகையால்தான் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கே சென்றார்.

இதன் பின்னராவது தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

இயற்கைப் பேரிடர் நிவாரண நிதிகளைப் பெற தி.மு.க.தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அ.தி.மு.க, பா.ஜ.கவி.ன் மற்றொரு கையாகச் செயற்படுகிறது.

தங்கள் மாநிலம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த தருணத்திலாவது தமிழக அரசு இங்கிருக்கும் பிரச்சினைகளை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி, நிதி உதவியைப் பெற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...