Main Menu

பா.ஜ.கவுக்கு துப்பாக்கியுடன் தான் உறவு : அழகிரி

காந்திக்கும் காங்கிரஸுக்கும் தொப்புள்கொடி உறவு உண்டு. ஆனால் பா.ஜ.கவுக்கு துப்பாக்கியுடன் தான் உறவு என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி விமானநிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “சுதந்திரத்திற்காக பா.ஜ.கவினர் ஒரு நிமிஷம் கூட சிறையில் இருந்தது கிடையாது ஆனால் எங்களுடைய ஜனநாயகம் அவர்களையும் அங்கீகரித்துள்ளது.

தமிழக அரசு செயலிழந்து விட்டது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி ஆதாரங்களைப் பெற முடியவில்லை. மத்திய அரசை எதிர்த்துக் கூடப் பேச முடியாமல் இருக்கிறார்கள். எனவே இந்த அடிமை அரசு தேவையா?. இந்த அடிமை அரசை நீக்கிவிட்டு மக்கள் அரசை ஏற்படுத்த வேண்டும்.

இடைத்தேர்தலில் வெற்றி என்பது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி. மோடி என்பவர் ஒரு மாயை. அவருடைய பிம்பம் மெல்ல, மெல்ல உடைந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு எல்லாவற்றையும் கார்ப்பரேட் போல விளம்பரம் செய்து வருகிறது‌. காங்கிரஸ் மட்டுமே இந்தியாவில் நிலையான, வலிமையான ஆட்சியைத் தர முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...