Main Menu

பா.ஜ.கவின் வருகை இலங்கை மக்களுக்கு மறுவாழ்வை தந்துள்ளது – தமிழிசை!

பாரதிய ஜனதா கட்சி ஆட்ச்சிக்கு வந்த பின்னர் தமக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என இலங்கை மக்கள் கூறுவதாக, பா.ஜ.க வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பா.ஜ.க தமிழகத்திற்கு தேவையான நல்ல திட்டங்கள் பலவற்றை அளித்துக்கொண்டிருக்கிறது.

பா.ஜ.க எதைக் கொண்டுவந்தாலும் தி.மு.க அதனை எதிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.  ஆனால் பிரதமரின் வருகை எங்களுக்கு மறுவாழ்வை தந்துள்ளது என இலங்கை மக்கள் கூறுகிறார்கள்

தற்போது வேலூர் தேர்தல் நடைபெறுவதற்கு காரணமே தி.மு.கதான். ஆனால்  தி.மு.க தலைவர் மு,க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும், பொய்யான காரணங்களை கூறி தேர்தலை நிறுத்தினார்கள் என்றும் கூறுவருகிறார்” என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...