Main Menu

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள எல் பசோ  நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, 26 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள ‘சியில்லோ விஸ்டா மால்’ எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வால்மார்ட் கடையில் இடம்பெற்றுள்ளது.

பேட்ரிக் கிருசிஸ் எனும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரே குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், துப்பாக்கிதாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அம்மாகாணத்தின் ஆளுநர் கிரெக் அபாட் டெக்சாஸின், ‘வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று என தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்நிகழ்வு மிகவும் மோசமானது எனவும் அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உறுதியளித்திருப்பதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பகிரவும்...