Main Menu

பாலியல் துஷ் பிரயோகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு – வர்த்தமானி வெளியீடு!

பாலியல் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்கு இழப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு ஆரம்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள வர்தமானி அறிவித்தலில், உடல்ரீதியில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு 4 இலட்சம் ரூபாய் முதல் 7 இலட்சம் ரூபாய் வரையும், உடல்ரீதியில் மிக கடுமையான பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு 5 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரையும் இழப்பீடு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் உயிரிழப்பு நேரிட்டால் 5 இலட்சம் முதல் 10 இலட்சம் வரையும் கர்ப்பமடைய நேரிட்டால் 3 இலட்சம் முதல் 4 இலட்சம் ரூபாய் வரையும் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு முதற்கட்டமாக 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...