பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றம்!
பரிஸில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த அகதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பட்டுள்ளனர்.
பரிஸின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த ஆயிரத்து 606 அகதிகளே இவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாருடன், பல்வேறு தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து இந்த வெளியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அவர்களினால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்கள் அனைத்தும் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பிரான்ஸில் இவ்வாறு மாதந்தோறும் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருக்கும் அகதிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அகதிகள் இவ்வாறு வெளியேற்றப்படுவது இந்த வருடத்தில் இது ஐந்தாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.