Main Menu

பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணைக்க தீர்மானம்

பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணைத்துக்கொள்வதற்கு பரிந்துரை செய்ய சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆயுர்வேத வைத்திய முறை தொடர்பாக பாடசாலை மாணவர்களை தௌிவூட்டுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறையை இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 மேலும் இந்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சுடன் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...