Main Menu

பாடசாலைகளை மீண்டும் திறக்க இன்னும் ஒருமாத காலமாகலாம் – கல்வி அமைச்சர்

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒருமாத காலமாகலாம் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனக் கூறினார்.

மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட நாளில் மீண்டும் திறக்கப்படும் என்றும், பாடசாலை நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகும் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த திகதியை அறிவித்த பின்னர், நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் கிருமி நீக்கம் செய்யப்பட்டு அதன் பின்னர் சாதாரண தரம், உயர்தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் பிற வகுப்புக்களும் ஆரம்பமாகும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...