Main Menu

பாகிஸ்தான் சுரங்கத்தில் வெடிப்புச் சம்பவம்: 12 பேர் பலி

பாகிஸ்தானின் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.  

பலோசிஸ்தான் மாகாணத்தின் ஹார்னாய் மாவட்டத்தில் நேற்று இரவு காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் இன்று பிற்பகல் நிறைவடைந்ததாக பலோசிஸ்தான் மாகாண  சுரங்க கண்காணிப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றபோது சுரங்கத்துக்குள் 20 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 8 பேர் காப்பாற்றப்பட்டனர், 12 பேர் உயிரிழந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

பகிரவும்...