Main Menu

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றும் 2 அதிகாரிகள் மாயம்

இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு இந்திய அதிகாரிகள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஏ.என்.ஐ.செய்தி நிறுவனமே பாகிஸ்தான் வட்டார தகவலை மேற்கோள்காட்டி குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு இந்திய அதிகாரிகளை இன்று (திங்கட்கிழமை) காலை முதல் காணவில்லை என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மேலதிக தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

பகிரவும்...