Main Menu

பழிவாங்கலில்தான் அதிக கவனம் செலுத்துகிறது அரசு: நாராயணசாமி குற்றச்சாட்டு

பழிவாங்கலில்தான் அரசுக்கு அதிக கவனம் இருக்கின்றதே ஒழிய நிர்வாகத்தில் இல்லையென புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.

காரைக்கால்- காசாகுடியில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாராயணசாமி மேலும் கூறியுள்ளதாவது, “மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில்  9% ஜி.டி.பி வளர்ச்சி இருந்த நாடு, இந்த 4 மாதத்தில் 5 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என இப்போது ஆட்சியிலுள்ள அனைவருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லை.

அவர்கள் அனைவரும் தங்களுக்கு எதிரான அரசியல் கட்சித் தலைவர்களை, எப்படிப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேலை செய்கிறார்களே ஒழிய நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதில்லை” என குற்றம் சுமத்தியுள்ளார்.

பகிரவும்...