Main Menu

பல்கேரியாவில் திடீர் என தீப்பற்றிய பேருந்து – 45 பேர் உயிரிழப்பு

பல்கேரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையொன்றில் பயணித்த பேருந்து தீப்பிடித்ததில் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை போஸ்னெக் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 12 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அமைச்சக அதிகாரி நிகோலாய் நிகோலோவ், தனியார் தொலைக்காட்சி சேவையான டீவுஏ இடம் தெரிவித்துள்ளார்.

விபத்திலிருந்து 7 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

துருக்கியில் இருந்து வடக்கு மாசிடோனியா நோக்கி குறித்த பேருந்து பயணித்ததாக நம்பப்படுகின்றது.

பகிரவும்...