Main Menu

பலமில்லாததொரு எதிர்க் கட்சியை நான் முன்னொரு போதும் கண்டதில்லை – மைத்திரி

இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போன்று பலமில்லாததொரு எதிர்க்கட்சியை தான் முன்னொருபோதும் கண்டதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளது என்றும் அது குறித்து தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக் கட்சி ஒரு கூட்டணியை அமைத்துக்கொண்டது என்றும் இந்த ஆண்டு தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் சர்வஜன வாக்குரிமை மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு பங்களிப்பு செய்துள்ளது என்பதை தாம் நம்புவதாகவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...