Main Menu

பரிஸ் விபத்தில் எட்டு பேர் படுகாயம்!

பரிஸில் இடம்பெற்ற விபத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பரிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து இடம்பெற்ற பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் காரணமாக, போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்...