Main Menu

நோர்வேயின் குற்றச்சாட்டினை மறுத்தது ரஷ்யா!

சைபர் தாக்குதல் குறித்து நோர்வேயினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ரஷ்ய அரசாங்கம் மறுத்துள்ளது.

நோர்வே நாடாளுமன்றத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பின் மீது கடந்த ஓகஸ்ட் மாதம் சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டது.

நாட்டின் முக்கிய ஜனநாயக பீடத்தின் மீது நடாத்தப்பட்ட இத்தகைய தாக்குதலானது மிகவும் ஆபத்தானது என நோர்வே வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா உள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் நோர்வே வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் நோர்வேயினால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த குற்றச்சாட்டினை ரஷ்யா மறுத்துள்ளது.

பகிரவும்...