Main Menu

நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என எச்சரிக்கை!

நிவர் புயல் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம்,  புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது.

சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. இது இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்.

மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாக நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிவர் புயலின் காரணமாக புதுச்சேரி,  காரைக்காலில் உள்ள அரசு,  தனியார் பாடசாலைகளுக்கு மறு உத்தரவு வரும்வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனப்படி தரம் 9 – 12 வகுப்பு மாணவர்களுக்கு மேற்படி விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...