Main Menu

நிர்பயா குற்ற வாளிகளுக்கு தூக்கு தண்டனை?

நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் வன்புணர்வு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் திஹார் சிறையில் மாற்றப்பட்டுள்ளதை அடுத்து, அவர்கள் தூக்கிலப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சிறை அதிகாரி கூறும்போது ‘4 குற்றவாளிகளும் கடும் பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நால்வரும் தனித்தனி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற சிறைக்கைதிகளால் இவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் இவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

இதற்கிடையே இன்னொரு அதிகாரி சிறை எண் 3-ல் 16 அறைகள் இருப்பதாகவும், பொதுவாக கருணை மனு நிராகரிக்கப்பட்ட கைதிகள் இந்த சிறைக்கு மாற்றப்படுவார்கள் என்றும்  தெரிவித்தார்.

‘இந்த சிறை எண் 3-ற்கு பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டு சிறையில் ஏதேனும் சிவில் பணிகள் தேவைப்படுகிறதா என்பதை கணிப்பார் எனத் தெரிவித்த அவர், தூக்கிலிடப்படுவது என்றால் புக்சார் சிறையிலிருந்து தூக்குக் கயிறுகள் வரவழைக்கப்படும். திஹாரில் தூக்கிலிடும் ஊழியர் திஹாரில் இல்லாததால் மற்ற சிறைகளிலிருந்து தூக்கிலிடும் ஊழியர் வரவைக்கப்படுவார்கள்’ என்றும் கூறினார்

குறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள, பவன் குமார் குப்தா என்பவர்,   மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திஹார் சிறை எண் 2க்கு மாற்றப்பட்டுள்ளார். ஏனைய குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் ஷர்மா,அக்‌ஷய் ஆகியோர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும்...