Main Menu

நாளை முதல் சீரற்ற முறையில் பரிசோதனை நடவடிக்கை – இராணுவ தளபதி

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் எல்லைகளில் மட்டுமன்றி நாடு முழுவதும் இந்த சீரற்ற பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

எனவே அனைத்து மக்களும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அமுல்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது சராசரியாக கொரோனா தொற்று உறுதியான 200 பேர் அடையாளம் காணப்படுவதாக குறிப்பிட்ட அவர் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதனால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரை தெரிவித்தார்.

பகிரவும்...