Main Menu

நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்று (திங்கட்கிழமை) இதனைத் தெரிவித்தார்.

இருப்பினும் கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என கூறினார்.

கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான 4 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

பகிரவும்...