Main Menu

நாட்டு மக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது – ஐ.தே.க

நாட்டு மக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 58 நாட்கள் கடந்துள்ள போதிலும், எத்தகைய அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்டவில்லை என்பதுடன், நாட்டு மக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்றி ஆட்சி அமைக்க முடியாது என்று அரசாங்க தரப்பினர் கூறிக்கொள்ளும் நிலையில் 42 உறுப்பினர்களுடன் ஆட்சி அமைத்த கடந்த அரசாங்கம் 100 நாள் திட்டம் உள்ளிட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள முடியாமையை நினைவில் கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...