Main Menu

நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 781 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது தொற்று உறுதியானோரில் 5 ஆயிரத்து 949 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 664 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 403 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...