Main Menu

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – கூட்டாக தீர்மானிக்க 10 தமிழ் கட்சிகள் இணக்கம்: சிறிகாந்தா

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பொதுவான குழு ஒன்றினை அமைத்து அதனூடாக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்தார்.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) தமிழ்க் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், அரசியல் ஆய்வாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் இடம்பெற்றது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலேயே 10 தமிழ் கட்சிகள் கூடி ஆராய்ந்திருந்தன.

இந்த கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் உள்ள பொருளாதாரப் பிரச்சினை தொடர்பில் ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாக கருத்துக்கள் தெரிவிப்பதைவிட கூட்டாக தீர்மானங்கள் எடுப்பதே சிறந்தது என்றும் இந்த விடயத்தில் இணக்கமான முடிவொன்று எட்டப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒன்றுகூடலில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்களில் இருந்து ஒவ்வொரு பிரதிநிதிகளை தெரிவுசெய்து செயற்பாட்டுக் குழு ஒன்று அமைத்து அதன் மூலம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமைகளில் ஒன்று கூடி மீண்டும் இது தொடர்பாக கலந்துரையாடுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...