Main Menu

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 75,829 பேருக்கு கொரோனா… 940 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டியுள்ளது.

நேற்று ஒரே நாளில் 75,829 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் ஒரே நாளில் 940 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 65 லட்சத்து 49 ஆயிரத்து 374ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து ஆயிரத்து 782ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 55 லட்சத்து 9 ஆயிரத்து 967ஆக உயர்ந்துள்ள நிலையில், 9 லட்சத்து 37 ஆயிரத்து 625 பேர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.

பகிரவும்...