Main Menu

நல்லெண்ண விஜயமாக இந்திய இராணுவப் படைகளின் பிரதானி இலங்கை வந்தடைந்தார்

ஐந்து நாட்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவப் படைகளின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இலங்கைக்கு வந்துள்ளார்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் ஐந்து பேர் கொண்ட குழு இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை வந்துள்ளது.

ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோரை சந்திக்க உள்ளார்.

அத்துடன், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, கடற்படை மற்றும் வான் படைத் தளபதிகளையும் இந்திய இராணுவப் படைகளின் பிரதானி சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...