Main Menu

நரேந்திர மோடியை விரைவில் சந்திக்கவுள்ளதாக கோட்டாபய தெரிவிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்திக்கவுள்ளதாக புதிய ஜனாதிபதியாக பதிவியேற்கவுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து ருவிற்றரில் பதிவிட்டிருந்தார்.

குறித்த பதிவில், “எங்கள் இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும் எங்கள் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்த்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், இதற்க பதிலளித்து ருவிற்றரில் பதிவிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, ”எங்கள் இரு நாடுகளும் வரலாறு மற்றும் பொதுவான நம்பிக்கைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. எங்கள் நட்பை வலுப்படுத்தவும் விரைவில் உங்களைச் சந்திக்கவும் நான் எதிர்பார்த்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பகிரவும்...