Main Menu

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து விவாதிப்பதற்கான திகதி இன்று அறிவிப்பு!

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் விசேட கூட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக நாடாளுமன்றில் விவாதிப்பதற்குரிய தினம் குறித்து இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.

அmத்தோடு, கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.

பகிரவும்...