Main Menu

நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் காலமானார்

நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை ஜெய்சித்ரா. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஜெயச்சித்ரா. அவர்,  தனது மகன் அம்ரேஷ் கணேஷை ஹீரோ மற்றும் இசையமைப்பாளராக்கும்  முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அம்ரிஷ், இப்போது தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக உள்ளார்.

ஜெயசித்ரா 1983-ல் கணேஷைத் திருமணம் செய்தார்.  கடந்த சில நாட்கள் திருச்சியில் தங்கியுள்ளனர். இந்த நிலையில்,  அவருக்கு திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கணேஷ் ‘மங்கள நாயகன்’ என்ற தமிழ்ப்படத்தை தயாரித்து, அதில் நாயகனாகவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...