Main Menu

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 117 பேர் ஹொங்கொங் அதிகாரிகளால் கைது

ஒரு வருடத்திற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 117 பேரை ஹொங்கொங் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஜனநாயக அரசியல்வாதிகள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் என 60 க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட 117 பேரில் 15 இளைஞர்களும் 79 முதியவர்களும் அடங்குவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பல மாதங்களாக இடம்பெற்ற வன்முறையான ஜனநாயக சார்பு போராட்டங்களைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி சீனா பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்தியது.

1997 ஆம் ஆண்டில் முன்னாள் பிரிட்டிஷ் காலனியில் இருந்து சீன ஆட்சிக்கு திரும்பிய ஜூலை 1 ஆண்டு நிறைவுக்கு முன்னதாக குறித்த சட்டம் ஹொங்கொங்கில் அமுலுக்கு வந்தது.

குறித்த சட்டம் கருத்து வேறுபாடுகளை நசுக்க பயன்படுத்தப்பட்டதாக மேற்கத்திய நாடுகளும் மனித உரிமைகள் குழுக்கள் உட்பட பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

பகிரவும்...