Main Menu

தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது மாநாடு

தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

குறித்த மாநாடு, அக்கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரனமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் பங்கேற்கவுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணியுடன் உள்ள சகல கட்சிகளும் கோட்டாபயவுக்கு ஆதரவு தெரிவித்து, கட்சியின் தேசிய மாநாடுகளை நடத்தி வருகின்றன.

அதனடிப்படையிலேயே இந்த கூட்டமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...