Main Menu

தீயணைப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு

உதவிக்குச் சென்ற தீயணைப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.  இச்சம்பவம் Carpentras (Vaucluse) நகரில் இடம்பெற்றுள்ளது. அவசர உதவிக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர். அதன்போது அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.  இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் 50 வயதுடைய ஒருவர் எனவும், அவர் அதே கட்டிடத்தின் தரை தளத்தில் வசிப்பவர் எனவும் அறிய முடிகிறது.  துப்பாக்கிச்சூட்டில் அதிஷ்ட்டவசமாக தீயணைப்பு படையினர் எவரும் காயமடையவில்லை.  பின்னர் சம்பவ இடத்துக்கு அதிரடிப்படையினர் (RAiD) அழைக்கப்பட்டனர். அவர்கள் தலையிட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கைது செய்தனர். 

பகிரவும்...