Main Menu

திராவிட இயக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது- வைகோ

திராவிட இயக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதனை கட்டிக்காக்கும் பொறுப்பு திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் ம.தி.மு.க ஆகியவற்றிற்கு இருப்பதாகவும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஓராண்டு நிறைவையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழ்மொழி செம்மொழியாகின்ற தகுதியை பெற்றுதந்த தலைவரான கருணாநிதி மறைந்து ஓராண்டாகியுள்ளது.

திராவிட இயக்கத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், இந்திய ஜனநாயகத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த வேளையில், திராவிட இயக்கத்தை கட்டிக்காக்கின்ற பொறுப்பு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிற்கும், அக்கட்சியின் தோழர்களுக்கும் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...